|
||
தங்க புதையல் வேட்டைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
உ.பி. மாநிலம் உன்னாவ் பகுதியில் தங்கப் புதையல் தேடும் பணிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. உன்னாவ் பகுதியில் இருக்கும் ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங் கோட்டையில் 1000 தொன் தங்கம் இருப்பதாக கனவு கண்டதாக ஷோபன் சாகார் என்ற சாது ஒருவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1000 தொன் தங்கத்தைத் தேடும் வேட்டை நடந்து வருகிறது. இந்தப் பணியில், இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் உத்தரப் பிரதேச மாநில அலுவலகக் குழுவும் இவர்களுக்கு உதவியாக தேசிய புவியியல் ஆய்வகத்தின் ஒரு குழுவும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அகழ்வாய்வை நிறுத்தக் கோரியும் முறைப்படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உ.பி. அரசின் தங்கப் புதையல் தேடலில் தாங்கள் தலையிட முடியாது என்றும் அகழ்வாய்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |