இக்காலத்தில் அன்புக்குரியவர்கள் இறந்தால், துக்கத்தையும் இறந்தவர்கள் மேல்
இருக்கும் மரியாதையும் வெளிப்படுத்த கறுப்பு வண்ணத்தில் உடை அணிகிறார்கள்.
ஆனால் அது
அப்படி தொடங்கவில்லை. பல்லாண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் ஆத்மா கொடுமையான கடைசி
தீர்ப்புக்கு அஞ்சி பரிச்சயமுள்ள ஓர் உடலுக்குள் புகுந்து இந்தப் பூமியிலேயே இருக்க
முயலும் என்று நம்பினார்கள்.
பிரிந்து போன ஆவி தங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று
பயந்து, துக்கம் காப்பவர்கள் கறுப்பு உடை அணிந்து வீட்டிலேயே இருப்பார்கள், அல்லது
நிழல்களில் மறைந்து கொள்வார்கள்.