|
||
தெ.கி. பல்கலைக்கழக மோதல் சம்பவம் : 53 பேரில் 49 பேர் விடுதலை
தென்கிழக்குப் பல்கலைக்கழக (பிரயோக விஞ்ஞான பீட) மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலையடுத்து கைது செய்யப்பட்டி ருந்த 53 மாணவர்களில் 49 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், ஆள் மாறாட்டம் செய்தார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 மாணவர்கள் 10ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிணையில் விடுவிக்கப்பட்டவர்களை டிசம்பர் 3ம் திகதி நீதிமன்றில் ஆஜ ராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ள்ளது. சென்றவாரம் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரு மாணவ குழுக்களி டையே நடைபெற்ற மோதலில் 53 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தும், இது தவிர 23 மாணவர்கள் காய ங்களுக்குள்ளாகி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையிலும் அம்பாறை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்தமையும் அறிந்ததே. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |