ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

பாக். போலியோ முகாம் மீது குண்டு தாக்குதல்: மூவர் பலி

பாக். போலியோ முகாம் மீது குண்டு தாக்குதல்: மூவர் பலி

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அருகில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

பெஷாவர் நகரின் புறநகர் பகுதியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பாதுகாப்பு அளித்த பொலிஸ் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு பொலிஸார் உட்பட 3 பேர் இறந்துள்ளனர்.

உலகில் போலியோ நோய் எஞ்சியிருக்கும் மூன்று நாடுகளுள் பாகிஸ்தானும் ஒன்றாகும். எனினும் அங்கு போலியோ தடுப்பு நடவடிக்கைக்கு ஆயுததாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். போலியோ சொட்டு வழங்கும் சுகாதார அதிகாரிகள் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

போலியோ முகாம் மூலம் உளவு வேலையில் ஈடுபடுவதாக ஆயுததாரிகள் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி