ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
எகிப்தில் பாதுகாப்பு படையினரை இலக்குவைத்து தாக்குதல்

எகிப்தில் பாதுகாப்பு படையினரை இலக்குவைத்து தாக்குதல்

எகிப்தில் பாதுகாப்பு படையினரை இலக்குவைத்து நேற்று நாட்டின் பல பகுதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

சுயெஸ் கால்வாய் நகரான இஸ்மைலியாவில் சோதனை முகாமில் கார் வண்டியில் இருந்த 5 எகிப்து இராணுவ வீரர்களை ஆயுததாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அதேபோன்று தெற்கு சினாயில் உள்ள பாதுகாப்பு படையினரின் அலுவலகம் ஒன்றின் மீது கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் கெய்ரோவின் புறநகர் பகுதியில் இருக்கும் செய்மதி தொலைக்காட்சி ஒன்றின் மீது எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் அண்மைக்காலமாக பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் நேற்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் 48 பேர் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரின் அலுவலகங்களை உள்ளடக்கிய குறித்த நான்கு மாடி கட்டடம் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]