|
||
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கோழி வளர்ப்பு திட்டம் பெரு வெற்றி
திவிநெகும தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் கோழி வளர்ப்பு திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரு குடும்பத்திற்கு 10 கோழிக் குஞ்சுகள் வீதம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக 3000 குடும்பங்களுக்கு 30000 கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனூடாக தற்பொழுது நாளாந்தம் 25,000 இற்கும் மேற்பட்ட முட்டைகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவதனால் முட்டையின் கேள்வி குறைவடைந்து விலையும் குறை வடைந்து மக்கள் தங்கு தடையின்றி முட்டையினை பெற்று வருவதோடு பயனாளிகளும் கூடுதல் வருமானத் தை ஈட்டி வருகின்றனர். பொருளா தார அபிவிருத்தி அமைச்சு இதற் கென 120 இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொடுத்துள்ளது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |