|
||
சிறுநீரக நோயாளர்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு கருவி
அநுராதபுரம் மாவட்ட சிறுநீரக நோயாளர்களின் நலன் கருதி, அந்நோயின் தாக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்புக் கருவிகள் வழங்கப்படவுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 17 ம் திகதி அநுராதபுர மாவட்ட விவசாய அபிவிருத்திக் கூட்டத் தொடரின் போது தொடர்ந்து உரையாற்றிய மாவட்டச் செயலர் திரு மஹிந்த செனவிரத்ன, மேலும் சிறுநீரக நோயினால் அல்லது நோயின் தாக்கத்துக்குள்ளானவர்களின் விபரங்களை நாம் அந்தந்தப் பிரதேச விவசாய அமைப்புகளின் ஊடாக திரட்டவுள்ளோம் அத்துடன் விசேடமாக மதவாச்சி, பதவிய, விலச்சிய, மஹகனந்தராவ ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவிலான நோயாளர்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளதுடன் அநுராதபுர போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோயாளர் அலகிலிருந்து மேலதிக விபரங்களைப் பெற்றுத் தருமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன். சகல விபரங்களும் சேகரிக்கப்பட்ட பின்னர் அதிகாரிகளின் பரிசீலனைக்குட்படுத்தி அந்த விபரங்களை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைத்த பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்புக் கருவிகள் வழங்கப்படவுள்ளன என்றார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |