|
||
அநுராதபுரத்தில் பாசிப்பயறு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்
அநுராதபுர மாவட்டத்தில் பாசிப்பயறு உற்பத்தியை ஊக்குவிக்க விவசாயத் திணைக்களம் பல ஆக்கபூர்வமான செயற்திட்டத்தினை முன் வைத்துள்ளது. மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் காணிகளில் பாசிப்பயறு நடுவதற்குத் திட்டமிட்டுள்ள மாவட்ட விவசாயத் திணைக்களம் முதலில் விதை உற்பத்தியை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பாசிப்பயறுச் செய்கையில் ஈடுபடவுள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகள் முதலில் சுமார் ஆயிரம் ஏக்கர் காணியில் பாசிப் பயறு விதை உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளனர். மாவட்டத்தில் நொச்சியாகம ராஜாங்கன, நுவரவெவ பிரதேசம் ஆகிய பகுதிகளிலேயே பாசிப்பயறு விதை உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அநுராதபுர மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |