|
||
பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா, சீனா பயணம்
பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற் கொள்கிறார். 20 ஆம் திகதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் அதிபர் விளாடி மிர் புதினை சந்திக்கும் பிரதமர் அணு விபத்து இழப்பீடு தொடர்பான இந்தியாவின் நிலையை விளக்கிக்கூறுவார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 ம் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 22 ஆம் திகதி சீனா செல்லும் பிரதமர் சீன பிரதமர் லீ கெகியாங்குடன் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பிரச்சினை, நதிகள் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார். எல்லை பாதுகாப்பில் கூட்டுறவு தொடர்பான ஒப்பந்தம் மற்றும் விசா நடைமுறைகளை எளிமையாக்குதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாட்டின் பிரதமர்களும் கையொப் பமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |