|
||
கடலில் நீராடச் சென்ற இருவர் உயிரிழப்பு
மொறட்டுவ மற்றும் அம் பலாங்கொட பகுதிகளில் கடலில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி இறந்ததாக பொலிஸார் கூறினர். நண்பர்களுடன் மொறட்டுவ லுனாவ முகத்துவாரம் பகுதியில் நீராடிய போது ஒருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளார். இவர் ரத்ம லான பகுதி தனியார் தொழிற் சாலை ஒன்றில் பணிபுரியும் 18வயது இளைஞர் என பொலிஸார் கூறினர்.இதேவேளை அம்பாலங்கொட, பலபிடிய பகுதி கடலில் நீராடிய இருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் காப்பாற்றப்பட்டதோடு மற்றவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். 15 வயதுடைய புபுது சாகர என்பவரே இவ்வாறு இறந்துள்ளார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |