|
||
மோசமான காலநிலை: மரணங்கள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்
தொடரும் மழை மற்றும் மோசமான கால நிலை காரணமாக சம்பவித்துள்ள மர ணங்கள் மற்றும் காயமுற்றவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு குழு வொன்றை உடனடியாக நியமிக்கு மாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவரது செயலாளர் லலித் வீரதுங்கவைப் பணித்துள்ளார். மீனவர்களின் மரணத்திற்கான காரணம் மற்றும் மோசமான காலநிலை தொடர்பில் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அறிவித்தல் வழங்கப்பட்டதா என்பவை குறித்து ஆராயும் பொறுப்பு மேற்படி குழுவுக்கு வழங்கப்படவுள்ளது. அக்குழு இது தொடர்பில் ஆராய்ந்து காலதாமதமின்றி அறிக்கையொன்றைத் தம்மிடம் கையளிக்க வேண்டுமென்றும் தமது செயலாளரைக் கேட்டுக் கொண்டுள்ளார். டாக்டர் டபிள்யு.மொஹட்டால தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஏ.திஸாநாயக்க சி.ராஜபக்ஷ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். (ஸ) |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |