|
||
மாத்தளை பாக்கியம் மகளிர் கல்லூரி கட்டட குறைபாட்டை நீக்க கோரிக்கை
மாத்தளை பாக்கியம் மகளிர் தேசியக் கல்லூரியின் மிகவும் பழைமை வாய்ந்த கட்டடத்தின் கூரை மற்றும் சுவர்கள் என்பன எந்த நேரமும் இடிந்து விழக் கூடிய அபாய நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இடிந்து விழுந்து ஆபத்துக்களை ஏற்படுத்திடக்கூடிய சுமார் 125x 25 சதுரடிகளைக் கெண்ட மேற்படி பாடசாலைக் கட்டடத்தை புனரமைத்துத் தரும்படி கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே அரசியல் தலைமைத்துவங்களுக்கும், கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கும் பல கோணங்களில் அறிவித்திருந்த போதும் பெற்றோர்களின் வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படாத நிலையில் மேற்படி கட்டடத்தின் இன்றை நிலை என்னவெனில் எந்தவித கல்வி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் எப்போ, எந்த நோரம் இக்கட்டட கூரையும் மதில்களும் இடிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் இருப்பது பற்றி பெற்றோர்கள் கூறுவதை நேரடியாக அவதானிக்க முடிகிறது. அஹிம்சா மூர்த்தி காந்தி அடிகளாரின் இலங்கைக்கான விஜயத்தின் போது மாத்தளை நகருக்கு விஜயம் செய்த காந்தி 1927.05.16ம் திகதி மேற்படி கல்லூரிக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |