ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைை
TUESDAY, FEBRUARY, 26, 2013

Print

 
இத்தாலி கொடுத்த ஆவணங்களுடன் இந்தியா திரும்புகிறது சி.பி.ஐ.

ஹெலிகொப்டர் கொள்வனவு முறை கேடு;

இத்தாலி கொடுத்த ஆவணங்களுடன் இந்தியா திரும்புகிறது சி.பி.ஐ.

ஹெலிகொப்டர் பேர முறைகேடு வழக்கு தொடர்பாக இத்தாலி சென்ற சி. பி. ஐ. குழுவுக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. ஹெலிகொப்டர் பேர முறைகேடு புகார் தொடர்பாக சி. பி. ஐ. அதிகாரிகள், இந்திய பாதுகாப்புத்துறை இணைச் செயலாளர், கொள்முதல் மேலாளர் (விமானப்படை) அருண் குமார் பால் ஆகியோரடங்கிய குழு, இத்தாலி சென்று விசாரணை நடத்தியது.

இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்களை இத்தாலி அதிகாரிகளிடம் இருந்து சி. பி. ஐ. பெற்றுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் முதல்கட்ட விசாரணை தொடங்கவுள்ளது.

கிடைத்துள்ள ஆவணங்களில் விசாரணையைத் தொடங்க போதுமான 3 மூலங்கள் உள்ளன.

சில ஆவணங்களை மட்டும் கொடுத்துள்ள இத்தாலி அதிகாரிகள், தங்களின் விசாரணை முடிந்த பிறகு இதர ஆவணங்களைத் தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இத்தாலி சென்ற 2 சி. பி. ஐ. அதிகாரிகளில் ஒருவர் மட்டும் திரும்பியுள்ளார். மற்றொரு அதிகாரி திங்கட்கிழமை திரும்பவுள்ளார். அவர் மேலும் சில ஆவணங்களை எடுத்து வரவுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]