ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

ஐதராபாத் குண்டு வெடிப்பு: மூன்று தீவிரவாதிகள் கைது

ஐதராபாத் குண்டு வெடிப்பு: மூன்று தீவிரவாதிகள் கைது

ஐதராபாத் தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்பு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் பற்றி தேசிய புலனாய்வு அமைப்புடன், ஐதராபாத் பொலிஸாரும், தீவிரவாத தடுப்பு படை பொலிஸாரும் பலமுனைகளில் விசா ரித்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே சம்பவ இடத்தில் கண்காணி ப்பு காமராவில் பதிவான உருவத்தை வைத்து ஒரு தனிப்படை பொலிஸார் துப்பு துலக்கி வருகிறார்கள். இதில் நேபா ளத்துக்கு தப்ப முயன்ற 2 பேர் பீகாரில் கைது செய்யப் பட்டனர். இவர்களில் ஒருவர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர்.

இந்த தாக்குதலில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த இயக் கத்தின் முக்கிய நிர்வாகியான சையத் மக்பூர் சில மாதங்களுக்கு முன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஐதராபாத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ரைஸ்சுதீன் மற்றும் கூட்டாளிகளை தீவிரமாக தேடினார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரைஸ் சுதீனின் நண்பர்கள் மஞ்சிர், வக்கார் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலம் ரைஸ்சுதீன் இருப்பிடத்தை கண்டு பிடித்தனர். நேற்று இரவு ரைஸ் சுதீன் தங்கி இருந்த இருப்பிடத்தை முன்தினம் பொலிஸ் படை முற்றுகையிட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி