ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

மதுரை மீனாட்சி கோயிலுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

ஐதராபாத் குண்டுவெடிப்பின் எதிரொலி :

மதுரை மீனாட்சி கோயிலுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

ஐதராபாத்தில் 2 இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகள் கடந்த 21 ஆம் திகதி வெடித்தன. இதில் 17 பேர் பலியானார்கள். சுமார் 119 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பயங்கர சம்வத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.

தமிழகத்திலும் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி முக்கிய நகரமாக விளங்கும் மதுரையிலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்

புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து மாநகர பொலிஸ் ஆணையர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது.

இதில் கோயில் பாதுகாப்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி