உலகக் கிண்ண கபடி போட்டியில் ஊக்கமருந்து சோதனை தொடக்கம்
உலகக் கிண்ண கபடி போட்டியில்
ஊக்கமருந்து சோதனை தொடக்கம்
உலகக் கிண்ண கபடி போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை
சேகரித்துள்ளது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா).
நடைபெற்ற 3 போட்டிகளில் பங்கேற்ற 6 அணிகளைச் சேர்ந்த 12 வீரர்களிடம் இருந்து
சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின்
ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.