சீனா, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணை ஒன்றை
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்துள்ளது.
சீனாவின் ஷென்யாங் இராணுவ மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு பிரிவில் இருந்து “ஹோங்கி
16” அல்லது “ரெட் ப்ளாக் 16” என்ற ஏவுகணை, விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும்.
அதோடு, விண்ணில்
மிக அதிக உயரத் தில் உள்ள மற்றும் மிகக் குறைவான உயரத்தில் உள்ள இலக்கு களையும்
தாக்கும் திறன் படைத்தது. சமீபத்தில் தான், இதே ரக ஏவுகணைகள் இரண்டை சீனா
வெற்றிகரமாக பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.