இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் 18 பேருடன் சென்ற சிறிய விமானம் ஒன்று கீழே
விழுந்து விபத்துக்குள்ளானதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர்
தெரிவித்தார்.
வட சுமத்ராவின் பஹோரக் கிராமத்தில் அந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த விமானத்தில் 15 பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் இருந்தனர். விபத்து குறித்து
உள்ளூர் கிராமத்தினர் தகவல் அளித்ததாகவும், சம்பவ இடத்தை அடைய மீட்புக் குழுவினர்
முயற்சித்து வருவதாகவும் போக்குவரத்து அமைச்சரக செய்தித் தொடர்பாளர் பம்பாங் ஏர்வான்
தெரிவித்தார். இந்த விமானத்தில் பயணித்த 15 பேரும் பலியாகி இருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது.