ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
பென்டகனை தாக்க முயன்றதாக இளைஞர் கைது

பென்டகனை தாக்க முயன்றதாக இளைஞர் கைது

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் தலைநகர் வொஷிங்டன் மீது தாக்குதல் நடத்த திட்ட மிட்டதாக சந்தேகத்தின் பேரில் 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிசிநெஸ்டை சேர்ந்த ரிஸ்வான் பிர்தவுஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னியக்க விமானத்தில் வெடிபொருட்களை நிரப்பி பென்டகன் மற்றும் அமெரிக்க தலைநகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு களுக்கு ஆயுத உதவி வழங்கியது விசாரணை மூலம் தெரியவந்ததாக எப். பி. ஐ. தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பிர்தவுஸ¤க்கு 35 ஆண்டு சிறைத் தண்டணை விதிக்கப் படும் வாய்ப்பு உள்ளது. ரிஸ்வான் பிர்தவுஸ் பெளதீகவியல் பட்டதாரியாவார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]