முஅம்மர் கடாபியின் மற்றுமொரு மகனான சாதி கடாபி மீது சர்வதேச குற்ற ஒழிப்பு பொலிஸான
இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சாதி கடாபி லிபிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த போது ஆயுத முனையில்
அச்சுறுத்தி சொத்துக்கள் சேர்த்ததற்காகவே அவர் மீது பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் கூறியுள்ளது.
சாதி கடாபி இம்மாத ஆரம்பத்தில்
லிபியாவின் அண்டைய நாடான நைகருக்கு தப்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி மற்றும் அவரது மற்றுமொரு மகனான சைப்
அல் இஸ்லாம் மீதும் இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.