பழம்பெரும் நடிகர்- டைரக்டர் எஸ்.ஏ. கண்ணன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு
வயது 82.
சக்தி நாடக சபா மற்றும் சிவாஜி நாடக மன்றத்தில் பணிப்புரிந்தவர் எஸ்.ஏ. கண்ணன்
பராசக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்களில் சிறு வேடங்களில்
நடித்திருந்தார்.
சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கப் பதக்கம்’ ‘வியட்நாம் வீடு’ ஆகிய நாட
கங்களை இயக்கி ‘சத்யம்’, ‘தனிக் குடித்தனம்’, ‘கீதா ஒரு செண்பகப்பூ’ ஆகிய படங்களை
இயக்கியும் இருந்தார்.
அவருடைய உடல் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தகனம் செய்யப் பட்டது.