ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
நிதியமைச்சகக் கடித விவகாரம்: பிரதமருக்கு பிரணாப் விளக்கக் கடிதம்

நிதியமைச்சகக் கடித விவகாரம்: பிரதமருக்கு பிரணாப் விளக்கக் கடிதம்

2 ஜி விவகாரம் தொடர்பான நிதியமைச்சகத்தின் இரகசியக் கடிதம் குறித்து விளக்கமளித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.

4 பக்கங்களைக் கொண்ட இந்த விளக்க கடிதத்தின் நகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் மீது நிதியமைச்சகம் குற்றம் சாட்டுவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதற்கு முடிவுகட்டும் வகையில் இந்தக் கடிதம் அமைந்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.

2ஜி விவகாரம் தொடர்பான இரகசியக் கடிதமும் அதனுடன் இணைக்கப்பட்ட 18 பக்கக் குறிப்பும் தயாரிக்கப்பட்டதற்கு நிதியமைச்சகம் மட்டுமே காரணமல்ல. சட்ட அமைச்சகம், தொலைத் தொடர்பு அமைச்கம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவை தயாரிக்கப்பட்டன என்றும் பிரணாப் முகர்ஜி விளக்கமளித்திருப்பதாகத் தெரிகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]