ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 04
கர வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JULY,07, 2011

Print

 
அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

இனப்பிரச்சினை தீர்வு:

அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை

-தினேஷ் குணவர்த்தன

இனப்பிரச்சினைக்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக தீர்வுகாணப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற் கான பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்த பிரேரணை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தினகரனுக்குக் கூறினார்.

தெரிவுக்குழு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமக்குள் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின் றன. இதனாலேயே தெரிவுக் குழுவை அமைப்பது தொடர் பான பிரேரணையை பாராளு மன்றத்தில் சமர்ப்பிப்பது தாம தமடைந்துள்ளது. கூடிய விரை வில் இது தொடர்பான பிரே ரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். இதேவேளை, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்கப் போவதில்லை யென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும்,

ஜே.வி.பி.யும் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]