|
||
மாறனுக்கு பதில் யார்? சென்னையில் கருணாநிதியை சந்திக்கும் பிரணாப்
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் சென்னை வந்து திமுக தலை வர் கருணாநிதியை சந்தித்து பேசவிருக்கிறார். 2 ஜி விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். முன்னதாக இதே 2 ஜி ஊழலில் சிக்கிய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவும் தனது பதவியை இராஜினாமா செய்தார். திமுக அமைச்சர்கள் இருவர் பதவி விலகியுள்ளதால் அந்த இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னையில் அவர் திமுக தலைவர் கருணா நிதியை சந்தித்து ராசா, மாறன் ஆகியோரக்கு பதிலாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். மாறன் இராஜினாமாவின் பின் இரு தலைவர்களும் சந்தித்து பேச விருப்பது இது தான் முதல் முறையாகும். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |