ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, OCTOBER, 21, 2010
பாடசாலை மட்ட உதைபந்தாட்டம்
பாடசாலை மட்ட உதைபந்தாட்டம்
(களுத்துறை தினகரன் நிருபர்)
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தி னால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ரீதியிலான 15
வயதிற்கு கீழ்ப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடரின்
களுத்துறை மாவட்டப் போட்டிகள் 11ம், 12ம் திகதிகளில் களுத்துறை புனித சிலுவைக்
கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டித் தொடரில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 12 அணிகள் பங்குபற்றின. இத்
தொடரின் சிறந்த அணியாகத் தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணி
2-0 என்ற அடிப்படையில் தர்கா நகர் அல்ஹம்ரா அணியை வெற்றி கொண்டதன் மூலம் அடுத்த
சுற்றுக்கு செல்லும் தகுதியைப் பெற்றது.
இறுதிப் போட்டியின் போது களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் சம்சாத் இரண்டு
கோல்களைப் போட்டு அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியதுடன் வெற்றிக் கிண்ணமும்
அணிக்குக் கிடைத்தது. இப்போட்டியின் அடுத்த கட்ட போட்டிகளில் மாவட்ட ரீதியாக தெரிவு
செய்யப்பட்ட சிறந்த முதல் அணிகள் மட்டுமே பங்குகொள்ளும் போட்டிகள் கடந்த
வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்கள் திருகோணமலை நகர சபை மைதானத்தில் நடைபெற்றது.
இதன் போது இலங்கையின் சிறந்த 15 வயதுக்கு கீழ்ப்பட்ட பாடசாலை களுக்கு இடையிலான அணி
தேர்ந்தெடுக்கப்படும்.