|
||||||
இந்தோனேஷியாவில் ரயில் விபத்து; 43 பேர் மரணம்
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய ரயில் விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர். பெடாமுதான் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இந்த விபத்து நிகழ்ந்தது. ரயில் நிலையத்தில் தரித்து நின்ற ரயில் மீது நிலையத்தை நோக்கி வந்த மற்றொரு ரயில் மோதிய போதே இந்த அனர்த்தமேற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் பயணிகள் கடுமையான தூக்கத்திலிருந்தனர். ரயில்கள் மோதியபோது ஏற்பட்ட பாரிய சப்தத்தையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டோடினர். மரணமடைந்தோரையும் காயமடை ந்தோரையும் ரயில் பெட்டிகளிலிரு ந்து வெளியே எடுக்க மீட்புப் பணியாளர்கள் கடுமையாக போராடினர். காயமடைந்தோர் வைத்தி யசாலைக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். இயந்திரக் கோளாராறா சாரதியின் தவறா விபத்துக்கான காரணம் என்கின்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. |
||||||
|