|
||||||
ஐந்து ஓவர் கிரிக்கெட் போட்டி
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டிய 06 பேர் பங்குபற்றும் மட்டுப்படுத்திய ஐந்து ஓவர்களுக்கான கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் இன்று திங்கட்கிழமை 04ம் திகதி நண்பகல் ஒரு மணிக்கு மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாக வுள்ளன. இந்தப் போட்டிகளின் முதல் நாள் போட்டிகளில் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பாடசாலை அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் அரையிறுதி ஆட்டம் வரையான போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த சுற்றுப் போட்டியில் யாழ். மாவட்டப் பாடசாலை அணிகள் பதினைந்து கலந்து கொண்டுள்ளன. |
||||||
|