ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

அச்சுப் பிரதி

 
பதுளை மாவட்டத்தில் பரவும் வைரஸ் கண்நோய்

பதுளை மாவட்டத்தில் பரவும் வைரஸ் கண்நோய்

பதுளை மாவட்டத்தில் ஒரு வித வைரசால் பரவும் கண்நோய் பரவி வருவதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வைரஸினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் கண்மடல் மற்றும் கண்ணிமை போன்றவை வீக்கமடைந்து எரிவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நோய் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு ஏற்படும் இடத்து அனைவரும் இவ்வைரசால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வைரஸால் தொற்றுக்குள்ளான 1000க்கும் மேற்பட்ட நோயாளர்கள் தினமும் தியத்தலாவ, வெலிமட, பண்டாரவளை, பதுளை தள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வெளியேறுவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெலிமட, பண்டாரவளை, பதுளை, தியத்தலாவ பிரதேசங்களிலேயே இக்கண்நோய் அதிகமாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. (ஐ-ஞ)