ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 05, 2010
சரத் பொன்சேகா பதவிக்கு வந்தால் சிறுபான்மையினரின் பிரச்சினை தீர்ந்துவிடாது
சரத் பொன்சேகா பதவிக்கு வந்தால்
சிறுபான்மையினரின் பிரச்சினை தீர்ந்துவிடாது
யாழ்ப்பாணத்தில் மனோ கணேசன் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்தில் மனோ கணேசன் தெரிவிப்புசரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு
செய்யப்படுவதால் சிறுபான்மையினருக்குத் தீர்வு கிடைத்துவிடாது என மேலக மக்கள்
முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம். பி. தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த சனியன்று பிரசார கூட்டமொன்று நடைபெற்றது.
இங்கு உரையாற்றுகை யிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதோடு இளைஞர்களே
இதில் அதிகமாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பலத்த சோதனைகளுக்குப் பின்னரே
மக்கள் கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்ட தோடு சோதனையின்போது ஒட்டப்படும்
“ஸ்டிக்கர்” இல்லாதோர் கூட்ட மண்டப த்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பி. ப. 3 மணிக்கு
கூட்டம் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பி. ப. 4.45 மணி வரையில்
மக்கள் காத்திருந்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன சிங்களத்தில்
உரையாற்றியபோது தமிழ் மொழி பெயர்ப்பு வழங்குமாறு மக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால்
சபையில் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது ஜயலத் ஜயவர்த்தனாவின் உரையை சதாசிவம் தமிழில்
மொழிபெயர்த்துதுள்ளார். ஜயலத் கூறியவற்றை அவரால் சரியாக மொழிபெயர்க்க முடியவில்லை.
ஜயலத்தின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்க்க முடியாமல் (தொடர். பக்.4)