ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JANUARY 05, 2010
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கு இரு சிறுவர்கள் மரணம்
யாழ்ப்பாணத்தில்
டெங்கு நோய்க்கு
இரு சிறுவர்கள்
மரணம்
(வேலணை குறூப் நிருபர்)
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் நேற்று
உயிரிழந்தனர்.
கன்னாதிட்டி ஒழுங்கையை வதிவிடமாகக் கொண்ட காந்தன் கீர்த்தனா (12) மற்றும் இணுவிலைச்
சேர்ந்த மூன்று வயது ஆண் குழந்தையொன்றுமே நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்து
உயிரிழந்துள்ளனர். டெங்கு நோயின் காரணமாகவே மேற்படி சிறுவர்கள் இருவரும்
உயிரிழந்திருப்பதனை வைத்தியசாலை வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்திருப்பதாகவும் யாழ். போதனா
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெங்கு நோயினால் நேற்று உயிரிழந்த சிறுமி கீர்த்தனாவின் வீட்டிலுள்ள அவரது ஏனைய
நான்கு சகோதரர்களும் கடும் காய்ச்சல் காரணமாக யாழ். பெரியாஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.