|
||||||
ஏ-9 ஊடாக இன்று முதல் யாழ். குடாவுக்கு தபால்
யாழ். குடாநாட்டு மக்களுக்குரிய தபால் பொதிகள் அனைத்தும் இன்று முதல் ஏ-9 வீதியூடாக எடுத்துச் செல்லப்படும் என வட மாகாண பிரதி தபால் மா அதிபர் வீ. குமரகுரு தினரகனுக்குத் தெரிவித்தார். 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதியுடன் ஏ-9 வீதியூடாக தபால் பொதிகள் அனுப்பும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ‘கிaன் ஓஷியன்’ கப்பல் மூலமே தபால் பொதிகள் அனுப்பப்பட்டன. யாழ். மக்களுக்கு சேவை செய்யும் நோக்குடன் ‘கிaன் ஓஷியன்’ கப்பல் தபால் பொதிகளை இலவசமாகவே யாழ். நகருக்கு எடுத்துச் சென்றது. கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு இலவசமாக சேவைகளை செய்த கப்பலுக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார். இன்று காலை 7.00 மணிக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றின் மூலம் யாழ். நகருக்குரிய சகல தபால் பொதிகளும் கொண்டு செல்லப்படவுள்ளன. |
||||||
|